எமது நாட்டில் மத ஹபு அடிப்படையில் செயற்படும் பள்ளிவாயல்களில் வெள்ளிக்கிழமைகளில் இமாம் குத்பாவுக்காக மிம்பரில் ஏறுவதற்கு முன் முஅத்தினால் ''அமைதியாக இருங்கள்.அடுத்தசகோதரனை பார்த்து வாய் மூடி இரு என்று சொன்னாலும் குத்பாவின் பலன் கிடையாது'' ஒரு அறிவிப்பு செய்வது வழமை.இந்த வழமை தொடர்பாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா 2004.08.03அன்று ஒரு தீர்ப்பை வெளியிட்டுள்ளது.அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ள முக்கிய விடயங்களாவன:நபியவர்கள் நிறைவேற்றிய குத்பா உரைகள் ஹதீஸ்களில் தெளிவாகப் பதியப் பட்டுள்ளது. நபியவர்கள் வெள்ளிகிழமைகளில் மிம்பரை நோக்கி வருமுன் ஒருவர் சமூகமளித்து இருப்பவர்களை நோக்கி சில ஆயத்கள்,ஹதீஸ்கள் ஓதிக் காட்டும் முறை அக்காலத்தில் அறவே இருந்ததில்லை.அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. பிரபல மத ஹப்களின் இமாம்களும் இம்முறை நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் அதை அண்மிய கால்களிலும் நடைமறையில் இல்லை என்றே கூறியுள்ளார்கள்.என்று தொடர்கிறது இந்த பத்வா.
ஜம்மியத்துல் உலமாவினால் இந்த பத்வா வழங்கப்பட்டு ஒரு ஆலோசனையும் முன்வைக்கப் பட்டுள்ளது. அதாவது ஜும்மா தினம் தொடர்பான ஹதீஸ்களை அறிவித்தல் பலகைகளில் எழுதியோ,பள்ளியின் நுழை வாயில்களில் தொங்க விடலாம் என்ற ஆலோசனையே அது.
பத்வா அளித்து வருடங்களை அடிந்த பின்னரும் இந்த பத்வா பல பள்ளிகளில் நடைமுறையில் இல்லை.அப்படியானால் இந்த பத்வா யாருக்கு? இந்த பத்வாவிட்கு கை எழுதிட்ட அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷைக் ரிஸ்வி முப்தி அவர்கள் பல குத்பா உரைகளை கடந்த காலங்களில் நிகழ்த்தி வருகிறார்.ஆனால் இந்த நடைமுறை தொடர்பாக அவர் வாய் திறக்காதது ஏன்? ஜம்மியத்துல் உலமாவை பின்பற்ற வேண்டும் என்று வாய் கிழிய கத்தும் சகோதரர்கள் இந்த பத்வாவை தூக்கி எரிந்தது ஏன்? பத்வா வழங்கி விட்டு அதை நடைமுறை படுத்த ஆவண செய்யாமல் இருப்பது ஏன் ? நபியின் சுன்னாஹ்வுக்கு மாற்றம் நிகழும் போது அதை கண்டிக்க ஜம்மியத்துல் உலமாவிட்கே முடியாமல் போய் விட்டது போலும்.!!!
குறிப்பு: அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பத்வாவின் நகலைக் காண கீழுள்ள pdf பைலை download செய்யவும்.
ஜம்மியத்துல் உலமாவினால் இந்த பத்வா வழங்கப்பட்டு ஒரு ஆலோசனையும் முன்வைக்கப் பட்டுள்ளது. அதாவது ஜும்மா தினம் தொடர்பான ஹதீஸ்களை அறிவித்தல் பலகைகளில் எழுதியோ,பள்ளியின் நுழை வாயில்களில் தொங்க விடலாம் என்ற ஆலோசனையே அது.
பத்வா அளித்து வருடங்களை அடிந்த பின்னரும் இந்த பத்வா பல பள்ளிகளில் நடைமுறையில் இல்லை.அப்படியானால் இந்த பத்வா யாருக்கு? இந்த பத்வாவிட்கு கை எழுதிட்ட அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷைக் ரிஸ்வி முப்தி அவர்கள் பல குத்பா உரைகளை கடந்த காலங்களில் நிகழ்த்தி வருகிறார்.ஆனால் இந்த நடைமுறை தொடர்பாக அவர் வாய் திறக்காதது ஏன்? ஜம்மியத்துல் உலமாவை பின்பற்ற வேண்டும் என்று வாய் கிழிய கத்தும் சகோதரர்கள் இந்த பத்வாவை தூக்கி எரிந்தது ஏன்? பத்வா வழங்கி விட்டு அதை நடைமுறை படுத்த ஆவண செய்யாமல் இருப்பது ஏன் ? நபியின் சுன்னாஹ்வுக்கு மாற்றம் நிகழும் போது அதை கண்டிக்க ஜம்மியத்துல் உலமாவிட்கே முடியாமல் போய் விட்டது போலும்.!!!
குறிப்பு: அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பத்வாவின் நகலைக் காண கீழுள்ள pdf பைலை download செய்யவும்.
tolugai_f6.pdf |